'மாமன்' பட வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூரி
சூரி, ஐஸ்வர்யலட்சுமி நடிப்பில் ,பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கத்தில், வெளியான குடும்ப படம் 'மாமன்'. 25 கோடிக்கு மேல் வசூலித்து லாபக்கணக்கில் சேர்ந்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சூரி "உண்மையான வெற்றி உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த நம்பிக்கையோட மாமன் கதையை துவங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கை யிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வ மான பயணம். உங்கள் அன்பும், ஆதரவுமே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
0
Leave a Reply